Skip to main content

தொகுதிக்குள்ளேயே நுழையக்கூடாது!!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு... வேட்புமனுதாக்கலுக்கு கூட செல்லமுடியாமல் வேட்பாளர் திணறல்

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல்கட்டமாக ஆந்திரா, ஒடிஷா, சிக்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
 

saumitra khan


வேட்பாளர்களும், அவரவர் தொகுதியில் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு வேட்பாளர் தனது தொகுதிக்குள் தன்னை அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார்.


சவுமித்ர கான், இவர் மேற்கு வங்கம், பிஷ்னுபூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார். இவர் முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ஆவார். அப்போது மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியது உள்ளிட்ட பல வழக்குகள் இவர்மீது இருக்கிறது. பிறகு அவர் பாஜகவிற்கு மாறினார். அதன்பிறகு திருட்டு மணல் வழக்குகளில் சிக்கினார். இந்த மாதிரியான குற்றங்களை செய்ததால் அவரை தொகுதி பக்கமே வரக்கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தவிட்டது, கடந்த மார்ச் மாதம் இந்த தடையை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்தது.


தொகுதிப்பக்கமே வரக்கூடாது என நீதிமன்றம் கூறியவரை மீண்டும் அதே தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது பாஜக. ஆனால், நீதிமன்றத்தடை இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்யக்கூட இவரால் தொகுதிக்குள் செல்ல முடியவில்லை. தொகுதிக்கு சென்று மனுத்தாக்கல் செய்யவும், பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அனுமதியளித்தது. மேலும், இதற்கேற்ப தடையில் மாற்றம் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடும்படியும் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.