Skip to main content

'உதவத் தயாராக உள்ளோம்...' - முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 'We are ready to help ...' - Modi assures Chief Minister!

 

'நிவர்' புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், 'நிவர்' புயல் பாதிப்புகள் குறித்து தொலைப்பேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, தமிழகத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

 

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தமிழக அரசுக்கு உதவ மத்திய குழுவை அனுப்பத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்