Skip to main content

கரோனாவை ஒழிக்க கோமிய பார்ட்டி... இந்து மகா சபை தலைவர் அழைப்பு!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020


சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. 



இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்த இந்துமகா சபை தலைவர் சக்ரபாணி மகராஜ் தற்போது நூதன ஐடியா ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி விரைவில் அவர் கோமியம் பார்ட்டி வைக்க இருப்பதாகவும், அதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். டீ பார்ட்டி போலத்தான் இந்த பார்ட்டியும் இருக்கும் என்றும், இதில் கோமியத்துடன், வரட்டி மற்றும் பால் சார்ந்த பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் கலந்துகொண்டு அனைவரும் கரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்