Skip to main content

டெல்லியில் 15 சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு கரோனா!  

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.   

   Corona for 15 CRPF players in Delhi

 

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 775 லிருந்து 779 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனவில் இருந்து 5,210 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 24,506 இருந்து 24,942 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் 15 சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்