Skip to main content

கரோனாவிற்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு!! 

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

corona

 

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்களப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரசியல் பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனாவால் உயிரிழந்துள்ளார். கரோனா உறுதி  செய்யப்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (65 வயது) அவர் உயிரிழந்துள்ளார். பெலகாவி தொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுரேஷ் அங்கடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்