Skip to main content

சி.எஸ்.சிலை திறப்பு... பெருமையில் ஈரோடு...!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

CS statue unveiled ... proudly Erode ...!

 

பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுவர் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான மறைந்த சி.சுப்பிரமணியம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்கள், தி.மு.க. தலைவர்களான அண்ணா, கலைஞர் என பல்வேறு தலைவர்களால் நட்பு பாராட்டைப் பெற்றவர். இந்திய அரசியலில் தமிழகத்தின் ஆளுமைமிக்க நிர்வாகியாக செயல்பட்டவர். ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட சி.சுப்பிரமணியத்திற்குச் சிறப்பு செய்யும் வகையில், ஈரோடு திண்டல் என்ற பகுதியில் உள்ள வேளாளர் கல்லூரியில் அவரின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது.

 

அச்சிலையின்  திறப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றிய சக்தி மசாலா நிறுவனத் தலைவர் பி.சி. துரைசாமி, "நம் நாட்டில் அன்று இருந்த 40 கோடி மக்களுக்கும், இன்றுள்ள 140 கோடி மக்களுக்கும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறத் தொலைநோக்கு பார்வையுடன் பசுமைப் புரட்சி திட்டம் கொண்டு வந்தவர் சி.சுப்பிரமணியம்''என்றார்.

 

விழாவுக்கு தலைமை வகித்த தேசிய விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன், "நாடு முழுவதும் படிப்படியாக இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்பதில் ஜவர்கலால்நேரு உறுதியாக இருந்தபோது, தமிழகத்தில் திராவிட இயங்கள்கள் மிக கடுமையாக எதிர்த்து போராடியது. அப்படிப்பட்ட இந்தி திணிப்பால் தென் மாநிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேருவுக்கு சி.எஸ். தெளிவாக எடுத்துக் கூறினார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிரான வலுவான போராட்டமும் சி.எஸ்ஸின் ஆலோசனையின் காரணமாகவே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, அங்கு, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற முடிவை நேரு எடுத்தார்" என்றார்.

 

காணொலிக் காட்சி மூலம் சி.சுப்பிரமணியம் சிலையைத் திறந்து வைத்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசும்போது,  "கிராமராஜ்யம் வேண்டும் என்ற காந்தியக் கொள்கையை ஏற்றவர் சி.எஸ். அதனைச் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கிராம ஆட்சி, கிராம மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் சி.எஸ். கொள்கையை நிறைவேற்ற முடியும்" என்றார்.

 

 

CS statue unveiled ... proudly Erode ...!

 

விழாவில், சி.சுப்பிரமணியத்தின் வழித்தோன்றல்களை கவுரவித்து, பாரதிய வித்யா பவன் தலைவர், பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் பேசும்போது, "நேர்மை, எளிமை, திறமை என மூன்றையும் ஒருங்கே கொண்டவர் சி.எஸ். தமிழ் வழிக்கல்வியில், நகராட்சி பள்ளியில் படித்து நாட்டின் நிதியமைச்சர் உள்ளிட்ட பதவிகளைப் பெற்றதோடு, பாரத ரத்னா விருது பெற்றவர். சிறந்த நிர்வாகிகளை உருவாக்கும் திறன் கொண்டவராக வாழ்ந்தார். நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா எப்படி இருக்க வேண்டும் எனக் கனவு கண்டதோடு, அதனை நனவாக்க செயல்திட்டங்களை சி.சுப்பிரமணியம் உருவாக்கினார். எந்த துறையில் நிர்வாகம் செய்தாலும், அதில் ஒரு முத்திரையை சி.எஸ்.பதித்துள்ளார். தமிழர்கள் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அடையாளமாக சி.எஸ்.வாழ்ந்தார். பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய மூவருக்கும் தமிழக அரசின் சார்பில் பொள்ளாச்சியில் சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அது நமக்கு பெருமைக்குரியது. சி.எஸ்ஸின் பசுமைப்புரட்சி சாதனைக்காக நோபல் பரிசு வழங்க அந்த குழுவினர் முன்வந்தபோது, அதனை மறுத்து, விஞ்ஞானிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.. அப்துல் கலாம், வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட குரியன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை பொருத்தமான இடங்களில் அமரவைத்து மாற்றத்தை ஏற்படுத்தியவர்.  

 

அவர் வாழ்ந்த 90 ஆண்டுகளில் ஒரு நாள் கூட தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ வாழ்ந்ததில்லை. சமுதாய நலனுக்காக மட்டுமே வாழ்ந்தார். இப்போதெல்லாம் நாம் சுயநலத்திற்காக எல்லாவற்றிலும் சமரசம் செய்ய தயாராகி விட்டோம். ஆனால், சி.எஸ். தன் வாழ்வில் தனக்காக எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. மாற்றத்திற்கு ஏற்ப மாற வேண்டும். ஆனால், எதில் மாறக்கூடாதோ அதில் பிடிவாதமாக இருக்க வேண்டும் என அந்த தலைமுறையினர் உணர்ந்து இருந்தனர். அடுத்த தேர்தல் பற்றிச் சிந்திக்காமல், அடுத்த தலைமுறை பற்றிச் சிந்தித்தனர்.

 

இன்றைய பள்ளி, கல்லூரிகளில் உண்மையான கல்வி கற்பிக்கப்படவில்லை. பணிவும், பக்குவமும் கொடுக்கும் கல்வியே தேவை. தற்போதைய வாழ்க்கைமுறை மிக அபாயகரமானதாக உள்ளது. இன்று சி.எஸ். போன்ற நேர்மையாளர்கள் தேவையாய் உள்ளார்கள். இப்போது எல்லாம் கெட்டுவிட்டது, நாம் எதுவும் செய்ய முடியாது என்று கருதாமல், நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தினால், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மகாத்மாவின் வழியில் இளம் சமுதாயம் சென்றால், இந்தியாவிற்கு மகத்தான எதிர்காலம் உள்ளது." என்றார்.

 

 

ஸ்டாலின் குணசேகரன், பாரதி வித்யா பவன் தலைவர் அருணா ராமகிருஷ்ணன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், சக்தி மசாலா இயக்குநர் சாந்தி துரைசாமி, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமாகா யுவராஜ், விடியல் சேகர் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்றார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.