Skip to main content

போகிற சமயத்தில் பொல்லாங்கு செய்கிறது பாஜக மோடி அரசு! வேல்முருகன் 

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
Velmurugan


இட்டுக்கட்டிய கட்டுக்கதைப் புராணங்களே வரலாறு என்போர், உண்மை வரலாறு சுடுவதால், அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள்!
 

அந்த அச்சத்தால், வரலாற்றையே காலிசெய்ய முற்படும் அற்பத்தனத்தைக் கண்டிப்பதுடன், இந்த வக்கிர எண்ணத்தை விட்டுவிட வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 பல்வேறு தேசிய இனங்களையும் ஒன்றுசேர்த்து  இந்தியாவை உருவாக்கித் தந்த பிரிட்டானியர், அதனைப் பாதுகாக்க ஜனநாயக வழிமுறைகளையும் சட்ட நடைமுறைகளையும் வழங்கிவிட்டுத்தான் நாட்டைக் காலி செய்தனர்.
 

தேசம் என்பது எல்லைக்கோட்டிற்குள் அடங்கிய மண்ணை மட்டுமே குறிப்பதல்ல; முதன்மையாக அது மக்களைத்தான் குறிக்கும் என்பதை உணர்ந்ததோடல்லாமல் நமக்கும் உணர்த்தியவர்கள் பிரிட்டானியர்.
 

அதனால்தான் வாழையடி வாழையாய் இம்மண்ணில் மக்கள் வாழ்ந்து படைத்துப் பதித்துவந்திருக்கும் வரலாற்றுத் தடங்களைத் தடயங்களைப் போற்றிப் பேணும்படியாய், 1904ஆம் ஆண்டிலேயே பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது பிரிட்டானிய அரசு.
 

பிறகு கால மாற்றத்தால் அந்த 1904ஆம் ஆண்டுச் சட்டம் மாற்றம் கண்டு, 1958ஆம் ஆண்டில் “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” என புனரமைக்கப்பட்டது.
 

 

 

இச்சட்டத்தின்படி, வரலாற்றுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை தடை செய்யப்பட்ட பகுதி; 200 மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி.
 

பல்லாயிரம் ஆண்டுகால கட்டுமானங்கள், தடயங்கள் மற்றும் மண்ணில் புதைந்துகிடக்கும் தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான், வரையறுக்கப்பட்ட இந்தத் தொலைவுகளுக்குள் எந்தப் பணிக்குமே அனுமதி இல்லை என்று தடை செய்கிறது 1958ஆம் ஆண்டுச் சட்டம்.
 

ஆனால் மோடி அரசு, கடந்த ஆண்டு, “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா-2017” என்ற ஒன்றைக் கொண்டுவந்து மக்களவையில் அதை நிறைவேற்றியது.
 

இந்தச் சட்ட திருத்த மசோதா-2017, வளர்ச்சிப் பணி, பொதுப்பணி, கட்டுமானப் பணிகளுக்கான தடையை உணர்வதால், 1958ஆம் ஆண்டுச் சட்டத் தடைகளையெல்லாம் நீக்குகிறது என்கிறது மோடி அரசு.
 

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்ட திருத்த மசோதா-2017 தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. அதனால் அது தெரிவுக் குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டிருக்கிறது.
 

தெரிவுக் குழுவின் முதல் கூட்டம் முடிந்தது; நேற்று இரண்டாவது கூட்டம்; இதில் அதற்கேற்படும் முடிவு, இந்த மண்ணின், மக்களின் வரலாற்றை, அதன் வடிவமாகத் திகழும் பாரம்பரியத் தொன்மைச் சின்னங்களை, தொல்பொருள் தளங்களை முடிவு செய்வதாக இருக்கும்.
 

மோடி அரசு குறிப்பிடும் வளர்ச்சிப்பணி, பொதுப்பணி, கட்டுமானப் பணி என்றால் என்ன; அவை யாருக்காக என்பதை கடந்த நான்காண்டுகளாகவே நாம் கண்டுவருகிறோம்; அவை இந்த நாட்டின் 87 விழுக்காடு பொருளாதாரத்தை கபளீகரம் செய்திருக்கும் 100க்கும் குறைவான நபர்களுக்காகவே என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
 

மக்களுக்கும் இந்த பாஜக மோடி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இந்தப் புவிப் பந்தில் எங்குமே இல்லாத, பிறப்பிலேயே மக்களை மேல். கீழாகப் பிரித்து, இதற்கு மேலும் அவர்களை இழிவு செய்ய முடியாது எனும்படியான சாதீயத்தையே சித்தாந்தமாகக் கொண்ட அரசுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை எப்படி இருக்கும்?
 

 

 

அதனால்தான் மக்கள் பண்பாட்டின் மீதே போர் தொடுத்திருக்கிறது மோடி அரசு; மக்கள் வாழ்வியலின் அனைத்து துறைகளையும் அழிக்கிறது; சமூக நீதியையும் தற்சார்பு பொருளியலையும் சுற்றுச்சூழலையும் கல்வியையும் பறிக்கிறது; இற்றுப்போன பாசிச இந்துத்துவத்தை முன்னிறுத்துகிறது; செத்துப்போன சமஸ்கிருதத்தைத் தோண்டியெடுக்கிறது.
 

இதற்காக மக்கள் பண்பாட்டை மறுதலிக்க வேண்டிய கட்டாயம்; அதற்காக பாரம்பரிய தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் மோடி அரசுக்கு!
 

நாடு முழுவதிலும் பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவமுடைய இடங்கள் 3,686; அவற்றில் யுனெஸ்கோவால் உலகப் புகழ் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை 22 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
 

இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 743 நினைவுச்சின்னங்கள்; முகலாயர்களால் கட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் 413 தொல்லியல் சின்னங்கள்; பழந்தமிழர் பண்பாட்டை நாகரிகத்தைப் பறைசாற்றுபவை. இவை இந்துத்துவத்திற்கு எதிரான வரலாற்று விழுமியங்கள்!
 

அதனால், அவற்றை அழித்தொழிக்கவும் செய்யலாம்; அவற்றின் மீது பாலங்கள், பலவழிச் சாலைகள் போட்டு கார்ப்பொரேட்டுகளின் தொப்பையை மேலும் பெருக்கவும் செய்யலாம் என்கிற வக்கிர எண்ணம் தவிர வேறென்ன? 
 

தமிழ்நாட்டில் ஆதிச்சநெல்லூர், கீழடி, பட்டறைப்பெரும்புதூர், இன்னும் பிற அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகமே உலகில் தலையாயது, தொன்மையானது எனச் சான்று பகர்கின்றன.
 

ஆனால் இவற்றை முடக்கிவைத்திருக்கும் மோடி அரசு, நிரந்தரமாக அவற்றை அழித்தொழித்துவிடவே இந்த “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா-2017”ஐக் கொண்டுவந்திருக்கிறது; இந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றவிருக்கிறது.
 

இந்தக் கயமைத் திட்டத்தை முறியடித்தாக வேண்டும்!
 

அணையும் தறுவாயில் அதீத ஒளி பளிச்சிடுவது போல், போகிற சமயத்தில் பொல்லாங்கு செய்கிறது பாஜக மோடி அரசு!
 

இட்டுக்கட்டிய கட்டுக்கதைப் புராணங்களே வரலாறு என்போர், உண்மை வரலாறு சுடுவதால், அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள்!
 

அந்த அச்சத்தால், வரலாற்றையே காலிசெய்ய முற்படும் அற்பத்தனத்தைக் கண்டிப்பதுடன், இந்த வக்கிர எண்ணத்தை விட்டுவிட வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.