Skip to main content

காந்தி 152: “அதிகாரத்திற்கு எதிரான கலகக்காரர்” - சுனில் கிருஷ்ணன்

Published on 02/10/2021 | Edited on 04/10/2021

 

sunil 1.jpg

 

காந்தி - மறைந்து 73 ஆண்டுகளானாலும் தொடர்ந்து பலவகைகளில் நினைவுகூரப்படுபவர். அவர் மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் இந்தியச் சூழலில் தொடர் வாசிப்புக்கும் தொடர் பகுப்பாய்வுக்கும் உள்ளாகும் மூன்று முக்கிய தலைவர்களில் காந்தியும் ஒருவர் (மற்ற இருவர் - அம்பேத்கர், பெரியார்). அந்தவகையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் குறித்து நவீன ஆளுமைகளுடன் சிறிய உரையாடலை மேற்கொண்டோம். நவீன கோட்பாடுகளின் அடிப்படையில் காந்தியை உள்வாங்கிக் கொண்டு இயங்கும் நால்வரிடம் நான்கு கேள்விகளை முன்வைத்தோம். ஒரே கேள்விகளுக்கு நான்கு விதமான பதில்கள் என்ற ஆர்வம்தான் இந்த உரையாடலுக்கான மையப்புள்ளி. 

 

முதலில் நம்முடன் உரையாடுபவர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன். காரைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர், நவகாந்தியர் என்றறியப்படும் சிந்தனையாளர். ‘அம்புப் படுக்கை’ சிறுகதை தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். gandhitodaytamil.com என்ற வலைப்பூவை நடத்தி வருகிறார். இனி சுனில் கிருஷ்ணன் உரையாடுவார்.

 

சமகாலத்தில் காந்தி எந்த வகையில் தேவைப்படுகிறார் அல்லது சமகாலப் பிரச்சனைகளுக்கு காந்தி எந்த மாதிரியான தீர்வாக இருக்கிறார்?

காந்திய காலத்து உலக தலைவர்களில் முக்கியமானவர்கள் என ரூஸ்வெல்ட்,  சர்ச்சில், ஸ்டாலின் என பலரைக் குறிப்பிட முடியும். வரலாற்று பங்களிப்பிற்கு அப்பால் அவர்களுக்கு இன்று ஏதாவது முக்கியத்துவம் உண்டா? காந்தியின் சமகாலத்தவர்களில் இன்று ஹிட்லர் மட்டுமே  கருத்து தரப்பாக நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை இன மேட்டிமையாளர்களால் முன்வைக்கப்படுகிறார். காந்தியம் அளவிற்கு சமகால முக்கியத்துவம், வேறு சிந்தனை தலைப்புகளுக்கு இல்லை. சமகாலத்திற்கான எதிர்வினையாகவும் காலம் கடந்த தீர்க்கதரிசனமும் கொண்டவை அவருடைய பார்வைகள். குறைந்தது இரண்டு புள்ளிகளில் அவர் சிந்தனைகள் சமகால பொருத்தம் கொண்டவை என சொல்ல முடியும். ஒன்று, வெகுமக்களுக்கான போராட்ட வடிவத்தை வடிவமைத்தது. இரண்டு, சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கிய புரிதல்.

 

sunil 2.jpg

 

காந்தி காலத்திலும் அதற்கு முன்பும் அகிம்சையையும் சகோதரத்துவத்தையும் பலர் பின்பற்றியிருக்கிறார்கள் (புத்தர், குருநானக், பெரியார், அம்பேத்கர் உட்பட). இதில் காந்தியின் அகிம்சை எந்தவகையில் வேறுபட்டது?

காந்தியே தன் விழுமியங்கள் மலைகளைப்போல் பழமையானவை என்று சொல்கிறார். காந்தியின் பங்களிப்பு என்பது தனிமனிதரின் ஆன்மீக கடைத்தேற்றத்துக்கான விழுமியங்களை ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்கு, தேசத்திற்கு, மானுட குலத்திற்கான விழுமியமாக நடைமுறை நோக்கில் கொண்டு சேர்த்ததுதான்.

 

இறுதி காலத்தில், தன்னுடைய பல செயற்பாடுகள் குறித்து காந்திக்கு குற்றவுணர்வு இருந்ததுபோல் தோன்றுகிறது. இச்சமூகத்தை இதுவரையில் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது போலான கருத்து அவர் மனதில் இருந்ததாக தோன்றுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

காந்தி ஒரு விஷயம் தன்னால் முடியும் என்பதாலேயே எல்லோராலும் முடியும் என எண்ணினார். தன் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்துகொள்ள அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. வாழ்க்கையைப் பரிசோதனையாகவே கண்டார். வாழ்வின் இறுதிகாலத்தில் தான் எதிர்பார்த்த வேகத்தில் தன்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை என்பதை தன் எல்லை என கண்டுகொண்டார். இந்திய சமூகம் காந்தியை தனது இலக்குக்காகப் பயன்படுத்திக்கொண்டது. அதற்கப்பால் அவர் முன்வைத்த மத ஒற்றுமை, சாதி ஒழிப்பு போன்றவை முக்கியத்துவம் இழந்தன. காந்தியை, இந்த எல்லைகள் தோல்விகளினூடாக இன்னும் நெருக்கமாக உணர்கிறேன்.

 

sunil 3.jpg

சுனில் கிருஷ்ணன்

 

இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் காந்தி எதிர்மறையான பிம்பமாகவோ, 'பழைய ஆள்' பிம்பமாகவோதான் இருக்கிறார். வன்முறையைக் கொண்டாடுகிற இன்றைய, அடுத்த தலைமுறைக்கு எப்படி காந்தியை கொண்டு சேர்ப்பீர்கள்?

நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூத்தர் தொடங்கி அரேபிய வசந்தம், வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு வரை காந்தி அதிகாரத்திற்கு எதிரான கலகக்காரர் என்றே அறியப்படுகிறார். இந்தியாவில் மட்டுமே அவர் அதிகாரத்தின் முகமாக காணப்படுகிறார். இது துரதிஷ்டவசமானது. காந்தியை ஆளும் அதிகாரத்தின் சின்னத்திலிருந்து விடுவிக்க முடியாத அளவிற்கு சிடுக்காகி உள்ளது. அவரை நெருங்கி அறியத் தொடங்கினாலே அவர் எத்தகைய கலகக்காரர் என்பதை உணர முடியும்.

 

 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.