Skip to main content

“என் தந்தைக்கு நிகரான ஆசிரியர்” - கமல்ஹாசன் நினைவு கூரல்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
kamalhassan about balachander

தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்தார். இதுவரைக்கும் 8க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளையும், தமிழக அரசு வழங்கும் கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கியவர். 

இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்