Skip to main content

பார்த்திபனுக்கே தெரியாமல் ஓடிடி-யில் வெளியான 'இரவின் நிழல்'

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

iravin nizhal ott release parthiban announced

 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட 13 படங்களில் 'இரவின் நிழல்' படமும் ஒன்றாக இருந்தது.  

 

இதனைத் தொடர்ந்து 'இரவின் நிழல்' ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை கடந்த மாதம் 31 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் பார்த்திபன். அந்த பதிவில், "அமேசானில் இன்றோ (31.10.2022) நாளையோ (01.11.2022) ‘இரவின் நிழல்’ வந்தே விடும். அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

பின்பு சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதம் ஆகிறது என அமேசான் தரப்பு சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதோடு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு ஓடிடியில் வரும்போது பேராதரவு தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். 

 

இந்நிலையில், 'இரவின் நிழல்' படம் அமேசானில் தனக்கே தெரியாமல் ரிலீஸாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல். ப்ளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன். நன்றியுடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

ஓடிடி ரிலீஸ் பற்றி அமேசான் தரப்பும் எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை அறிவிக்காத நிலையில் சமூக வலைதளங்களில் அமேசான் ஓடிடியில் படம் இருப்பது போல் சில புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்குவா டூ கேம் சேஞ்சர் - பட்டியலை வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
kanguva to game changer amazon prime ott announced his list

திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதே போல் வெப் சீரிஸ்களுக்கும் படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் 2024ல் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கங்குவா - சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூட்யூபில் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. 

கேம் சேஞ்சர் - ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரிலீஸ் அப்டேட் நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

சிட்டாடெல் - வெப் சீரிஸான இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் மற்றும் டீகே இயக்கி வரும் இத்தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பாகும். இந்தியாவில் சிட்டாடல் ஹனி பனி என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 'கேங்க்ஸ்' - சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றும் இந்த சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். 

சுழல் சீசன் 2 - ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத் தவிர்த்து ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி', அனுஷ்கா ஷெட்டியின் ‘காதி’, விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார், எனப் பல படங்களின் திரையரங்கிற்கு பின் வெளியாகும் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Next Story

“எல்லாமே வித்தியாசமாக இருக்கு” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலகப் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். உணவகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளைக் கொண்டு வயிற்றுப் பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துகள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.

பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.