Skip to main content

சாலையிலேயே கொல்லப்பட்ட 59 வயது முதியவர்; 8 சிறுமிகள் சேர்ந்து செய்த கொலை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

59-year-old man injured by 8 girls; A sensation in Canada

 

கனடாவில் 59 வயதுடைய முதியவரை 8 சிறுமிகள் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கனடாவின் டொரோண்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13 முதல் 16 வயதுடைய சிறுமிகள் 59 வயதுடைய முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

 

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து சிறுமிகளை கைது செய்தனர். அப்பொழுது 3 சிறுமிகள் 13 வயதுடையவர்கள் என்றும், 3 சிறுமிகள் 14 வயதுடையவர்கள் என்றும், 2 சிறுமிகள் 16 வயதுடையவர்கள் என்றும் தெரிந்தது. அந்த சிறுமிகள் அனைவரும் நகரத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதும், அவர்கள் இணையத்தில் அறிமுகமானவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.  

 

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், மாலைப்பொழுதில் அந்தப் பகுதியில் அவர்கள் ஏன் கூடினார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், அவர்கள் எதற்காக கூடினார்கள் என்றும் தெரியவில்லை. கத்தியால் குத்துவதற்கு முன் இரு தரப்பிற்கும் இடையே ஏதோ ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது” எனக் கூறினர்.

 

மேலும் காவல்துறையினர் கூறுகையில் அவர்கள் ஒரே அணி அல்ல. அவர்கள் ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது எனக் கூறினர்.

 

கனடாவின் சட்டங்கள் காரணமாக கொலை செய்த பெண்களின் அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.