Skip to main content

விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

 

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு  அக்.21 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சூரப்பட்டு கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.ஷண்முகம் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்