Skip to main content

திருமயத்தில் விபத்தில் உயிரிழந்த 10 சடலங்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை கவுரவித்த தெலுங்கானா அரசு!!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது கண்டெய்னர்  லாரி மோதிய விபத்தில் ஐய்யப்ப பக்தர்கள் 9 பேர் உள்பட உயிரிழந்த 10 பேரின் உடல்களை தெலுங்கானாவுக்கு ஏற்றிச்சென்ற தமிழகத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அந்த மாநில அரசு அங்கு நேற்று சால்வை அணிவித்து கௌவுரவித்தது.

  

தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் நர்சபூர் பகுதியை சேர்ந்த 14  அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

 Telangana Government honored Ambulance drivers who carried 10 dead bodies

 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஐய்யப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா வேன் மீது, புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 9 ஐய்யப்ப பக்தர்கள் 9 பேர் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயத்துடன் வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை அப்பகுதி பொதுமக்களும் மீட்பு குழுவினரும் மீட்டு புதுக்கோட்டை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில் அங்கு வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் உயிரிழந்வர்களின் உடல்களை தமிழக அரசு செலவிலேயே இறந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழக அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் 10 ஆம்புலன்ஸ்களில்  அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நர்சபூரில் அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

   

இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை  மீட்டு காயம் அடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதோடு உயிரிழபந்தவர்களின் உடலை உடனே அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தமிழக அரசை தெலுங்கானா அரசு பாராட்டியதுடன்.  நர்சபூருக்கு உடல்களை ஏற்றி சென்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தெலுங்கானா அரசு சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நர்சபூர் வட்டாட்சியர் பிக்சாபதி மற்றும்  வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பேருந்து விபத்து; காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Pudukkottai Collector ordered to provide advanced treatment to those injured in bus accident

புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் வழியாக மணப்பாறை சென்ற தனியார் பேருந்து அன்னவாசல் அருகே அதிவேகமாகச் சென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 32 பேர் படுகாயமும் 4 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் மிக மோசமாக காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உறவினர்கள் அதிகமாக கூடியுள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் பலர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்ததுடன் இவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Private bus overturned accident; 20 people were injured

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அன்னவாசல் பகுதிக்கு முன்பாக உள்ள ஒன்றிய அலுவலக பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் குறுக்காக தலைகுப்புற கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அலறியடித்தபடி உள்ளே சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நடந்தது என அங்குள்ள ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.