Skip to main content

'தொடர் மழையால் வேலையின்றி தவிப்போருக்கு நிவாரணம் வேண்டும்'- போராட்டத்திற்கு தயாராகும் தமிழ்நாடு விவசாய சங்கம்!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

 Tamil Nadu Farmers' Union prepares for 'Give relief to unemployed agricultural workers'

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வரும் 5-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் குறித்து இரு அமைப்பினரும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்  தலைமை தாங்கினார்.

 

கூட்டத்தில் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட பொருளாளர் எஸ்.தஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம் சதானந்தம், மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.கே.சரவணன் மூர்த்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைத்தலைவர் ஜெயகுமார், இணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட குழு தமிழரசன், வைத்திலிங்கம், சுப்பிரமணியம், நெடுஞ்சேரலாதன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் காளி, கோவிந்தராஜன், தர்மதுரை, செல்வகுமார், கணேசன், கொளஞ்சி, முருகன், மெய்யழகன், பாண்டுரங்கன், அண்ணா துரை, கணேசன், சரவணன், அஞ்சலை, மணி, தமிழரசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

"சம்பா சாகுபடிக்குத் தேவையான அனைத்து இடங்களிலும் காலதாமதமின்றி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் தொடர் மழையால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புனரமைக்க ஒன்றிய அரசு 6230 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 30 ஆயிரம் நெல் பயிருக்கு வழங்கிட வேண்டும், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கும் காய்கறிகள் தோட்டப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், மழையால் சேதமடைந்த நிலங்களைச் சரிப்படுத்த வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும், கோமாரி நோயால் இறந்த கால்நடைகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும், அமெரிக்கப் படைபுழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 

தொடர் மழையால் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளிக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூபாய் 5000 வழங்கிட வேண்டும், மாவட்டம் முழுவதும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களைச் சீர்படுத்த வேண்டும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு, சுவர் இடிந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.