Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் ஒருவர் கைது!!!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

மண்ணடியில் நடந்த விசாரணையில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை பூந்தமல்லியிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த மூவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இலங்கையை சேர்ந்த அந்த 3 பேர் தங்கியிருந்த வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 
 

srilanka bomb blast


இந்நிலையில் இன்று காலை, பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை நபர் ஒருவரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் ஓராண்டாக தங்கியிருந்த அவரது பெயர் துனுகா ரோஷன். அவர்மீது இலங்கையில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இங்கு அவர் சுதர்சன் என்ற பெயரில் தங்கியிருந்தார் என்றும் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்