Skip to main content

கொலைமிரட்டல் - சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது வழக்குப்பதிவு

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

வனக்காவலர்களை மிரட்டியதாக சேலம் திமுக எம்.பி.  எஸ்.ஆர்.பார்த்திபன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.  வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது சாலை அமைக்க மரங்களை வெட்டியது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

s

 

இந்நிலையில், அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குபதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.    

 

சார்ந்த செய்திகள்