Skip to main content

களைகட்டும் ஆவணி சுபநிகழ்ச்சிகள்... தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை!!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Rise in prices for flowers

 

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்ததால் தமிழ்நாட்டில் சுபநிகழ்ச்சிகள் களைகட்டியிருக்கிறது. இன்று (20.08.2021) முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூவின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது.

 

மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ கடந்த வாரங்களில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் மதுரை மட்டுமல்லாது சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பூக்களை விற்பதற்காகவும், வாங்குவதற்காகவும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் வருகை தருவார்கள். 

 

நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 100 டன் பூக்கள் இச்சந்தையில் விற்பனையாகும். இந்நிலையில், இன்று முகூர்த்த தினம், நாளை ஓணம் பண்டிகை, வரலட்சுமி நோன்பு ஆகியவை வரும் நிலையில், பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ 2,000 ரூபாய்க்கும், கடந்த வாரம் கிலோ 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ 1,000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 700 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 700 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 150 ரூபாய்க்கும் என அனைத்துப் பூக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. பூக்களின் விலை உயர்ந்தாலும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மலர் சந்தைக்கு அதிக அளவில் வருகை புரிந்துவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Next Story

காந்தி மார்க்கெட் மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகம் திறப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Opening of Trichy Gandhi Market Fish and Meat Store Mall

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று (08.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.  

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள் மதிவாணன், ஜெய நிர்மலா, முக்கிய பிரமுகர் வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.