Skip to main content

தமிழகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியையும் கொந்தளிப்பையும் உணர வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
All party meeting




தமிழகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியையும்  கொந்தளிப்பையும் உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுத்த “கால அவகாசம்” கேட்கும் மனுவை திரும்பப் பெற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

All party meeting


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 

All party meeting


 

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தற்கொலை செய்த பிரவுக்கும், தீக்குளித்த ரவிக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி இழுத்தடித்துக்கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்ற கழக தோழர் பிரபு மற்றும் மக்கள் விரோத நியூட்ரினோ திட்டத்தைப் புகுத்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து இறந்த ம.தி.மு.க. தோழர் ரவிக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக உரிமைகளைக் காப்பாற்றவும், மீட்டு எடுக்கவும் அறவழியில் போராட்டம் நடத்திட வேண்டும் எனவும் இது போன்ற உயிர்த் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது என இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

All party meeting


 

அதனைத் தொடர்ந்து முழு அடைப்புக்கு ஒத்துழைத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்து தமிழ்நாட்டு உரிமைகளை அப்பட்டமாக அத்துமீறி ஆக்கிரமித்து நசுக்கிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அதற்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க மனமில்லாமல் மவுனமாகத் துணை போகும் அதிமுக அரசைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அமைதியான அறவழிப் போராட்டத்தை அனைத்து தரப்புத் தமிழ் மக்களும் வெற்றிகரமாக நடத்தியிருக்கும் மிகமுக்கியமான நிகழ்வை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது. 1.4.2018 முதல் நடைபெற்ற தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை மீட்கும் அறவழிப் போராட்டங்கள் ஒரு சிறிய வன்முறைக்குக் கூட இடமளித்து விடாமல் மிகவும் அமைதியாக நடைபெற்றிருப்பதிலிருந்தே தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமான இந்த போராட்டங்களை கட்டுப்பாட்டோடு எவ்வளவு உயரிய ஜனநாயகப் பாதையில் வழி நடத்தியிருக்கின்றன என்பதை நாட்டு மக்களுக்குத்  தெரிவிக்கும் வகையில் அமைந்திருப்பதை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வரவேற்கிறது. 
 

​    ​all paRTY meeting


 

இதைத் தொடர்ந்து 5.4.2018 (நேற்று) நடைபெற்றுள்ள முழு அடைப்பில் அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், காவிரி உரிமையை மீட்டு எடுக்கும் ஒரே நோக்கத்துடன் ஓரணியில் நின்று முழு அடைப்புப் போராட்டம் அமோக வெற்றி பெற ஆதரவளித்துள்ளனர் என்பது ஒட்டு மொத்த தமிழகமும் மாமலைபோல் உறுதியுடன்  திரண்டு எழுச்சியுடன் நிற்கிறது என்ற உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் அறிவித்த ஜனநாயக ரீதியிலான மறியல் போராட்டங்களையும், முழு அடைப்பையும் வெற்றிகரமாகவும், அறவழியிலும் நடத்திக் கொடுத்துள்ள தமிழக மக்களுக்கு இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு இனியும் காலம்  தாழ்த்தாமல், தமிழகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியையும்  கொந்தளிப்பையும் உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுத்த “கால அவகாசம்” கேட்கும் மனுவை திரும்பப் பெற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்...” டி.ஆர்.பாலு எம்.பி.

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Concentration resolution will be brought in Parliament against Governor tR Balu

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31.01.2024) தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்த பின் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தியக் குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்கும் சட்டம் ஆகும். இந்த சட்டத்தில் இருக்கும் கருத்துகள், ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு புறம்பாக பேசக் கூடிய கருத்தாக உள்ளது. எனவே இது குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தினோம்.

Concentration resolution will be brought in Parliament against Governor tR Balu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனக்கு பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பணிகள் எதும் நடைபெறவில்லை எனவே மத்திய அரசு இது குறித்து பேச வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் குறித்தும் பேச வேண்டும் என வலியுறுத்தினோம்:” எனத் தெரிவித்தார். 

Next Story

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Budget Session The central government has called for an all party meeting

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி நாளை (30.01.2024) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.