Skip to main content

ரெயில்வே தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு! விருத்தாசலம் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்! 

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
Railway workers struggle!



ரெயில்வே தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விருத்தாசலம் ரயில்வே தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள  போராட்த்தில் ஈடுபட்டனர். 
 

குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 26000 வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, பாதுகாப்பு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒரு வழிப்பாதையில் பணிபுரியும் ஆட்களை வைத்தே இரு வழிப் பாதையில் பணி புரிய வைக்க கூடாது, LC கேட்களில் கேட்மேன்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இரயில்வே தொழிலாளர்கள் இன்று ஒருநாள் அடையாள  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

விருத்தாசலம் ரெயில்வே சந்திப்பில் கிளை தலைவர் கணேஷ்குமார் மற்றும் செல்வம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்