Skip to main content

'திமுக வெற்றிக்காக பாடுபடுவோம்' -முத்தரசன் பேட்டி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். திமுக வெற்றிக்காக பாடுபடுவோம். வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா? - கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேட்டி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
reported late Kaniyamur school girl mother is contesting in the Vikravandi by-election

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் மாணவியின் உடற்கூறு ஆய்வு சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கை, பள்ளி வளாகம் மற்றும் உடற்கூறு ஆய்வகம் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம் காவல்துறையினருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இன்று காலை நீதிமன்றத்தில் மாணவியின் தாய் செல்வி தற்பொழுது ஆஜராகியுள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினர் ஆஜராகாததால், நேரம் குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருந்த நிலையில் பின்னர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார். அப்போது  தாய் செல்வியும் ஆஜரானார். அவர்கள் கூறியிருக்கும் ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்குவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுவே விரைவாகத்தான் விசாரிக்கப்படுகிறது என நீதிபதி விளக்கம் அளித்தார். 

இதனிடையே நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவியின் தாய் செல்வி போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வியிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வி, “விக்கிரவாண்டி இடைத்தேரலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலம் அவகாசம் குறைவாகவே உள்ளதால் அதற்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயாரானால் போட்டியிடுவேன். இல்லையென்றால் போட்டியிடவில்லை” எனக்கூறியுள்ளார்.

Next Story

“அரசின் சாதனை திட்டங்களை சொன்னாலே  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறலாம்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
You can get a huge victory in  by-elections if you tell the govt achievements says Minister I. Periyasamy

ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திண்டுக்கல் மாநகரில்  உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனு மற்றும்  கிராமங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை  மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். 

அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்ட  தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து களப்பணி ஆற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் பணியாற்றக்கூடிய  பகுதிகள் குறித்து கேட்டறிந்ததோடு வரலாறு காணாத வெற்றியை பெறும்  அளவிற்கு ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில்  ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.   

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில்  40க்கு40 பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் அனைத்து  கிராமங்களும் தன்னிறைவு பெற்று வருகின்றன. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை  மூலம் அனைத்து கிராமங்களும் சாலை வசதி, குடிதண்ணீர், தெருவிளக்கு வசதி  நூறு சதவிகிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் மூலம்  லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று தங்கள் விளை பொருட்களை  அருகில் உள்ள நகரங்களுக்கு சிரமமின்றி எடுத்துச் சென்று பயன்பெற்று  வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழகம் முதல்வரின் சாதனை  திட்டங்களையும், மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் மற்றும் பெண்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் சென்று  எடுத்துரைத்தாலே எளிதாக மாபெரும் வெற்றி பெறலாம்” என்று கூறினார்!