Skip to main content

வியாபாரியிடம் ஒன்றரைக் கோடி மோசடி! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

One and a half crore fraud to the merchant! Police in serious investigation

 

தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியைச் சேர்ந்தவர் பழனி செல்வம். இவர் அதே ஊரில் புல்லட் மரகதம் அக்ரோ ப்ராடக்ட் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இதன் மூலம் நவதானிய வியாபாரம் செய்துவருகிறார். கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கம் ஊர்களில் இருந்து விவசாயிகளிடம் வேர்க்கடலை வாங்கி சின்ன சேலம் நகரில் இயங்கிவரும் சரண்யா கடலை ஆயில் மில்லிடம் விற்பனை செய்து, பணம் பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், ஆயில் மில் உரிமையாளரான பெரியசாமி, பழனி செல்வத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய். இந்தப் பாக்கித் தொகையில் 45 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்.

 

இன்னும் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் தர வேண்டிய நிலையில், 70 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார் பெரியசாமி. ஆனால் அவர் கொடுத்த காசோலையை வங்கியில் கொடுத்துப் பணமாக மாற்ற முயற்சி செய்தபோது வங்கியில் பெரியசாமி பெயரில் பணம் இல்லை என காசோலை திரும்பிவந்துவிட்டது. இதனையடுத்து பழனி செல்வம் கடந்த மாதம் 12ஆம் தேதி ஆயில் மில்லுக்குச் சென்று பெரியசாமியிடம் தனக்குத் தர வேண்டிய ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயில் மில் உரிமையாளர் பெரியசாமி, பழனி செல்வம், அவரது மனைவி தங்கம், மகன் பாலுசாமி மற்றும் இருவர் உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமாக பழனி செல்வம் நேற்று (08.07.2021) சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பெரியசாமி, தங்கம், பாலுசாமி உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.