Skip to main content

“இனி மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை”- தலைமை பொறியாளர்!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
"No more chances of power off" - Chief Engineer

 

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகவும் சட்டமன்ற தேர்தல் காரணமகவும், 6 மாதங்களுக்கும் மேலாக மின்சார துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அனைத்து துணை மின் நிலையங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டு மின் ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய பழுதுகளை முழுமையாக அகற்றி உள்ளனர்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து திருச்சி மாவட்ட மின் பகிர்மான தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “திருச்சியில் மொத்தம் 7 மின் பராமரிப்பு கோட்டங்கள் உள்ளன. அதில் 52 துணை மின் நிலையங்கள், அவற்றில் 350 மின்னூட்டிகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக 500 மின் ஊழியர்களை கொண்டு சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் தற்போது  50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டது.  252 மின்கம்பங்கள் சாய்ந்து நிலையில் அவற்றை சீர் செய்யப்பட்டது. 6200 இடங்களில் மின் கம்பங்களை உரசியும் மின்கம்பங்கள் லோடு சேர்ந்து வளர்ந்து நின்ற மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. 200 மின் மாற்றிகள் புதிய திறப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரம் கிலோமீட்டர் மின் பாதைகள் முழுமையாக சீரமைத்து தர அளிக்கப்பட்டுள்ளதாகவும், இனி மின் தடையே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்.

 

"No more chances of power off" - Chief Engineer

 

இருப்பினும் துறையூர் கொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தோடு சேர்ந்து இருக்கக்கூடிய மின்கம்பங்களில் சிறிய ரக விலங்கினங்கள் ஆன அணில், மயில், பாம்பு ஒரு சில நேரங்களில் பறவைகள் உள்ளிட்டவைகளால் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும் இவை மின்கம்பங்களில் வந்து அமர்வதும் ஓடுவதும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும் பட்சத்தில் அவைகளால் ஏற்படும் மின் துண்டிப்பு உடனடியாக ஊழியர்களை வைத்து சரிசெய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.