Skip to main content

நெய்வேலி அருகே விவசாய நிலத்தில் திறக்கப்பட இருந்த மதுபானகடையை மூடக் கோரி போராட்டம்!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள வெளிக்கூணங்குறிச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகினர். இக்கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், விவசாய நிலத்தை அழித்து, புதிதாக கூடாரம் அமைக்கப்பட்டு, மதுபானகடை திறக்க அதிகாரிகள் முற்பட்டனர். 

 

protest

 

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் பா.ம.க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டனர். பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலை செய்யும், தமிழக அரசின் சர்திவாதிகார போக்கை கண்டித்தும், மதுபான கடையை மூடக்கோரியும், முழக்கங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, மதுபானகடை மூடி விடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்த, பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக அரசைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/06/2024 | Edited on 25/06/2024

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அவலத்திற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கூறி அரசைக் கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக  இன்று கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்.

Next Story

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து புரட்சி பாரதம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/06/2024 | Edited on 25/06/2024

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பூவை.ஜெகன் மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.