Skip to main content

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால அகழி...பட்டா இருக்கு என்று பீதியை கிளப்பும் ஆக்கிரமிப்பாளர்கள்!

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

பந்தநல்லூர் கோயிலை சுற்றியுள்ள அகழியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூரில் புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலை சுற்றி ஆயிறம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அகழியும் இருக்கிறது. சமீபகாலமாக அகழியின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அதற்கான அடையாளத்தை இழந்து காணப்படுகிறது.

thanjavur district Thousand Years Old Chola Trench Strike the peoples

 

இந்த நிலையில் பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பந்தநல்லூர் அகழியை தூர்வாரி நீராதாரத்தை காக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் " அகழியை மூன்று வாரத்திற்குள் தூர்வார வேண்டும், அகழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் இரண்டு வார காலமாக அகற்றப்பட்டு வருகின்றன.
 

இதற்கிடையே ஆக்கிரிமிப்பாளர்கள் சிலர் " தங்களுக்கு அகழியில் பட்டா இருக்கிறது என 30- க்கும் மேற்பட்டோர் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு நான்கு வாரங்களுக்கு அவர்களின் இடத்தில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்ற வேண்டாம் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

 

thanjavur district Thousand Years Old Chola Trench Strike the peoples

 


அதன் பின்னர் 23.8.2019 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள அகழியை தூர்வார மூன்று ஜே.சி.பி இயந்திரங்களோடு வந்தனர். இதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அவர்களை பணி செய்ய விடாமல் இயந்திரத்தின் முன் நின்று கூச்சலிட்டனர். இந்த செய்தி காற்றில் தீயாக பரவ பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், வணிகர்களும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் அருகே பந்தநல்லூர் குடந்தை சாலையில் திரண்டனர்.

சுமார் 500 பேர் திரண்டு வந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அகழியை தூர்வார வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷமிட்டு கொண்டு பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு திருவிடைமருதூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரிமிப்பாளர்களுக்கு, இன்னும் ஒரு வாரம் காலக்கெடு இருக்கிறது. அதற்குள் அவர்கள் ஆக்கிரமிப்பை அவர்கள்  அகற்ற வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணையை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியலை தற்காலிகமாக கைவிட்டனர்.

 

thanjavur district Thousand Years Old Chola Trench Strike the peoples




பந்தநல்லூர் பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகையில், " நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசே நீர்நிலைகளை புதுப்பிக்கிறது. பல இடங்களில் நீதிமன்றமும்,  நீதிபதிகளுமே சொந்த செலவில் தாங்களே முன்னின்று குளங்களை, ஏரிகளை தூர்வாரி வருகின்றனர். அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொக்கிஷம். இதை ஆக்கிரிமித்து ஒரு சிலர் கடைகளையும், வீடுகளையும்,  கட்டிக்கொண்டு பட்டா இருக்கிறது என பொய் பிரச்சாரம் செய்து கொண்டு, நீர்நிலைகளை தூர்வார விடாமல் தடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரவில்லை என்றால் பந்தநல்லூரை சுற்றியுள்ள நாற்பது கிராம பொதுமக்களையும், அரசியல் கட்சியினரையும், மாணவர்களையும் ஒன்றுதிரட்டி பெருந்திரல் போராட்டம் நடத்துவோம்." என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.