Skip to main content

ஆழ்கடலில் நீந்தும் முகக் கவசங்கள்... நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை!  

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Masks for swimming in the deep sea

 

கரோனாவிலிருந்து இருந்து மனித இனத்தின் உயிரைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் தற்பொழுது கழிவுகளாக நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை வைத்துள்ளது.

 

கரோனா பெருந்தொற்று பரவிய ஆரம்பத்திலிருந்து முகக் கவசம் அணிவதும், கைகளை முறையாகக் கழுவுவதும், தனிமனித இடைவெளியும் தான் தீர்வு எனத் தற்போது வரை அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி மனிதர்களை கரோனாவிலிருந்து காப்பாற்றிய கவசங்கள் கழிவுகளாக மாறி தற்போது ஆழ்கடலில் குவிந்து நீர்வாழ் உயிரினங்களின் உயிருக்கு வேட்டு வைத்துள்ளது.

 

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவர் அரவிந்த் மற்றும் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்காகச் சென்றபொழுது மனிதர்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள் ஆழ்கடலில் மிதப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் குழு அது தொடர்பான காட்சிகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் தேங்கியிருக்கும் முகக் கவசங்களை அகற்றும் பணியிலும் அந்தக் குழுவினர் ஈடுபட்டனர்.

 

முறையாக முகக்கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை நீக்காமல் போனதே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழும்பிவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்