Skip to main content

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என டிஜிபி உறுதி- மாணவியின் தந்தை பேட்டி!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த மாணவி பாத்திமா, தனது விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தனது மகள் இறப்பு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபியை சந்தித்த பின் மாணவியின் தந்தை லத்தீஃப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

madras iit college student fathima latheef incident parents meet dgp and cm for today


"மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என டிஜிபி உறுதியளித்துள்ளார். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கப்படுவர் என்று உறுதி தந்தார்கள். தனது மகளின் மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் என் மரணத்திற்கு காரணம் என மகள் குறிப்பு எழுதியுள்ளார். எனது மகள் கடிதம் எழுதி வைத்து விட்டு தான் இறந்துள்ளார். ஆனால் எப்.ஐ.ஆரில் குறிப்பிடவில்லை. நாங்கள் வந்து பார்த்த போது அறையில் கயிறு இல்லை. அந்த அறைக்கு சீல் வைக்கவும் இல்லை. எனது மகள் பாத்திமாவிற்கு மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவங்களை பார்த்தபோது பாத்திமா மரணம் தற்கொலை போல் தெரியவில்லை.

madras iit college student fathima latheef incident parents meet dgp and cm for today



எந்த ஒரு காரியத்தையும் கடிதமாக எழுதி வைப்பார் பாத்திமா. அதேபோல இதையும் செய்துள்ளார். எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவர். எல்லா பாடங்களிலும் முதல் இடத்தில் இருந்தார். எனக்கு துன்புறுத்தல் நடைபெறுவதாக தினமும் என்னிடம் பேசுவார் பாத்திமா. நவம்பர் 8- ஆம் தேதி இரவு ஒரு மணி நேரம் ஐஐடி கேண்டீனில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளார் பாத்திமா. தமிழகத்தில் என் மகளுக்கு கொடுமை நடந்துள்ளது. இதுபோன்று இனிமேல் யாரும் மரணமடையக்கூடாது. ஐஐடியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை தரக்கோரினோம். ஆனால் தர மறுக்கின்றனர். பாத்திமாவின் செல்போன் போலீஸ் வசம் உள்ளது. அதை பெற்றோர் முன்னிலையில் அன்-லாக் செய்ய வேண்டும். தமிழக அரசையும், டிஜிபியையும் முழுமையாக நம்புகிறேன். முழுமையான விசாரணை நடக்கும் என நினைக்கிறேன்" என்றார்.


டிஜிபியை தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை, ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப் சந்தித்தார். அப்போது தனது மகள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.  


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.