Skip to main content

போதையில் டார்ச்சர் செய்த மகனை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்ற தாய்-தேனியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

கம்பம் அருகே துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வாலிபர் கொலை வழக்கில் தாயை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி சாலையில் பொட்டம்மன் துறையில் முல்லைப்பெரியாறு செல்லும் பகுதியில் சரக்கு மூட்டையில் வாலிபர் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கிடந்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு முன்தினம் ஒரு பெண்ணும் ஒரு வாலிபரும் சாக்குமூட்டையில் கொலை செய்யப்பட்டவரின் உடலை வீசி சென்றது தெரியவந்தது.

 

theni incident

 

அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்  நந்தகோபாலன்சாமி தெற்குவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வி என்பதும், அவருடன் வந்தது அவரது இரண்டாவது மகன் விஜய் பிரசாத் என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் செல்வியிடம் விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் சிலர் கூறுகையில்..... மகனை கொலை செய்த செல்வியின் கணவர்  ராஜா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பிறகு செல்வி தனது இரண்டு மகன்களான விக்னேஸ்வரன் விஜய் பிரசாத் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் என்ஜினீயரிங் பட்டதாரி. மேலும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு தனது சொந்த தேவைக்கும் பழக்கத்துக்கும் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது மட்டுமின்றி தவறான நண்பர்களுடன் பழக்க வழக்கமும் இருந்தது இதனால் தினமும் வீட்டில் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் இவர்களுடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஸ்வரனின் தம்பி விஜய பிரசாத் காதல் திருமணம் செய்துள்ளார். தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். தனக்கு திருமணமாகாத நிலையில் தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் தன்னை அவமதித்து விட்டதாக விக்னேஸ்வரன் நினைத்தார். இதனால் தம்பியிடமும் தாயிடமும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இந்த  நடவடிக்கை பார்த்த விஜய் பிரசாத்தின் மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தனது மகனை கொலை செய்ய செல்வி முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் போதை தலைக்கேறிய நிலையில் வந்த விக்னேஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அந்த உணவில் விஷம் கலந்துகொடுத்து மகனை கொன்றுள்ளார். அதன்பிறகு தனது மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்ற மகன் என்றும் பாராமல் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அரிவாளால் வெட்டி தனித்தனியாக எடுத்தார். உடலை மட்டும் சாக்குப்பையில் கட்டி தொண்டமாந்துறை தடுப்பணையில் வீசியுள்ளார். முன்னதாக தலையை வீரப்ப நாயக்கன் குளம் அருகில் உள்ள கிணற்றிலும் கை மற்றும் கால்களை காந்தி நகருக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்  நேற்று இரவு போலீசார் மீட்டனர். ஆனால் கைகள் மற்றும் கால்களை தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை இரவு நேரம் ஆகிவிட்டதால் உடல் பாகங்களை தேடுவதை நிறுத்தி விட்டு இரண்டாவது நாளாக போலீசார் தேடி வருகின்றனர். மேலும் செல்வி கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொலையில் உடல் பாகங்களை மறைக்க மேலும் இரண்டு பேர் உடந்தையாக இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே செல்வியின் இரண்டாவது மகன் விஜய பிரசாத் செல்வியின் அண்ணன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது எனவே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.

மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை வெட்டி கொன்று விட்டு, உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டும் அளவிற்கு  செல்வி  துணிந்தது ஏன்? போதைப் பழக்கம் மட்டுமின்றி வேறு ஏதேனும் தவறான பழக்கத்துக்கு விக்னேஸ்வரன் ஆளானாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி பெற்ற மகனையே தாய் கொடூரமாக வெட்டிக் கொன்று உடலை துண்டு துண்டாக வீசி சென்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.