Skip to main content

திமுக எம்.எல்.ஏ அறையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

incident in MLA Hostel

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

 

இந்நிலையில், தற்போது திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கக்கூடிய பூண்டி கலைவாணனின் அறையில் உள்ள பொருட்கள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு எல்.இ.டி டி.வி, மிக்ஸி, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயுள்ளது. எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏவின் அறையிலுள்ள பொருட்கள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்