Skip to main content

பத்திரமாக வச்சிருக்க சொன்ன முதலாளி; 30 லட்சத்துடன் பதுங்கிய தொழிலாளி - ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

The employer who told you to stay safe ... the worker who hid with 30 lakhs! Rajasthan police beat up !!

 

சேலம் அருகே, ஜவுளிக்டை அதிபர் ஒருவர் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி கொடுத்திருந்த 30 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவான கடை மேலாளரை காவல்துறையினர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

 

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்பாராம். இவருடைய மகன் ஆனந்த் (வயது 28). சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேச்சேரி, ஜலகண்டாபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். 

 

இவருடைய கடையில், கடந்த 7 ஆண்டுகளாக ஆனந்தின் பூர்வீக மாவட்டத்தைச் சேர்ந்த பவானிபால் சிங் (வயது 24) என்ற வாலிபர் மேலாளராக வேலை செய்து வந்தார். ஒரே ஊர்க்காரர், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தன் குடும்ப உறுப்பினர் போலவே கருதி, சொந்த வீட்டிலேயே ஆனந்த் தங்க வைத்திருந்தார். 

 

கடந்த பிப்ரவரி மாதம், ராஜஸ்தானில் வசித்து வரும் ஆனந்தின் தந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரைப் பார்த்துவிட்டு வருவதற்காக ஆனந்த் ராஜஸ்தான் கிளம்பியிருக்கிறார். 

 

அப்போது தனது ஜவுளிக்கடைகளில் வியாபாரம் ஆனதன் மூலம் கிடைத்த 30 லட்சம் ரூபாயை மேலாளர் பவானிபால் சிங்கிடம் கொடுத்துவிட்டு, அத்தொகையை ஜவுளிகள் விநியோகம் செய்த நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், ஊர் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 

 

ஜவுளிக்கடை அதிபரும் ஊரில் இல்லை; கையிலோ சுளையாக 30 லட்சம் ரூபாய் இருக்கிறது. பணத்தைப் பார்த்ததும் மதி மயங்கிய பவானிபால் சிங், பிப். 13ஆம் தேதியன்று ஜலகண்டாபுரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேராமக்களை அணைத்துவிட்டு, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். 

 

சொந்த மாநிலத்திற்குச் சென்றிருந்த ஆனந்த், ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பினார். தன் மேலாளரும் காணவில்லை; பணத்தையும் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்தார். 

 

அவருடைய உத்தரவின்பேரில் இந்தப் புகாரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பவானிபால் சிங் பணத்துடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிச்சென்றுவிட்டது தெரிய வந்தது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் ஜாலிபா கிராமத்தில் பதுங்கி இருந்த பவானிபால் சிங்கை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 22.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மீதப்பணத்தை அவர் செலவு செய்துவிட்டது தெரிய வந்தது. 

 

சேலம் அழைத்து வந்த பவானிபால் சிங்கை, வழக்கமான விசாரணை நடைமுறைகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.