Skip to main content

மருந்தின்றி தவிக்கும் வீட்டில் சிகிச்சைபெறும் கரோனா தொற்றாளர்கள்  -தேனி மாவட்ட அதிகாரிகளின் மெத்தனப்போக்கு!  

Published on 30/05/2021 | Edited on 30/05/2021

 

Corona infected people being treated at home without medicine - Theni district officials' complacency!

 

தேனியில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மற்றும்  பெரியகுளம், போடி, ஆண் டிபட்டி, கம்பம், சின்னமனூர் உள்பட அரசு மருத்துவமனைகள் மற்றும்   தனியார் முகாம்களில் கரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள்  6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 

 

இப்படி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து மாத்திரைகளைக் கூட சரிவர வழங்குவது இல்லை. அதிலேயும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடுகளை வாங்கி கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு மருத்துவமனைகளில் செய்யக்கூடிய சாப்பாடுகளையே அந்த மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகளுக்கு கூட மருத்துவமனையில் சமைக்கும் சாப்பாட்டைதான் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டு சிகிச்சையில் இருந்து கொள்கிறோம் என்று கூறி விட்டுச் செல்கிறார்கள். அப்படி  செல்லக்கூடிய மக்களுக்கு உங்கள் பகுதியிலேயே இருக்கக்கூடிய சுகாதார அலுவலர்கள் வந்து மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். நீங்கள் தனிமையில் இருந்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

 

அதன்மூலம் மாவட்டத்தில் 5000 பேர் வரை வீட்டு சிகிச்சையில் இருந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்க  அந்தந்த பகுதி சுகாதார அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதை எல்லாம்  கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்  உட்பட சுகாதாரதுறை  அதிகாரிகளிடம் மூடி மறைத்துவிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். அப்படி இருந்தும் கூட கரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் சரிவர ஆர்வம் காட்டவில்லை என்று பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் வெளிப்படையாக சுட்டிக்காட்டினார்.

 

Corona infected people being treated at home without medicine - Theni district officials' complacency!

 

ஆனால் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ்,  ''தடுப்பு பணியில் அரசு சிறப்பாக செயல்படுகிறது'' என்று கூறினார். அதனாலோ என்னவோ சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசும் போதுகூட, ''பலமுறை துணை முதல்வர் ஓபிஎஸ்... ஓபிஎஸ் என்று தான் பேசினாரே தவிர கடைசியில்தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்று கூறினார். கடந்தாண்டு கரோனா  முதல் அலை வந்த போது இதே அதிகாரிகள் தான் பணியில் இருந்தனர். அப்போது இந்த அளவுக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லை. வீடுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகளுடன் பழங்களையும் வீடு தேடி கொடுத் தனர். அந்த அளவுக்கு ஓபிஎஸ்க்கு விசுவாசமாக இருக்கக்கூடிய மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி மற்றும்  ஒபிஎஸ் உறவினர்களான மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் இளங் கோவன், சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும்  உணவு பாதுகாப்பு அதிகாரியான  ராகவன் உள்பட சில அதிகாரிகள் இருந்தனர். தற்பொழுது அதே  அதிகாரிகள்தான் தொடர்ந்தும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது கரோனா தடுப்பு பணியில் ஆர்வம் காட்டாமல் அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெயர் அளவில் செயல்பட்டுக் கொண்டு ஓபிஎஸ்க்கு விசுவாசமாக இருந்து வருகிறார்கள்.

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் மருந்து மாத்திரைகள் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டும் உயிருக்கும் போராடியும் வருகிறார்கள். அதுபோல நான் நாளுக்கு நாள் கரோனா தொற்றும் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்படி இருந்தும் மாவட்ட கலெக்டர்  கிருஷ்ண உன்னி உட்பட பல அதிகாரிகள் மெத்தன போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.