Skip to main content

மருத்துவமனையில் வீடற்றவர்களுக்கு உணவு - சிதம்பரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

ர

 

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் திங்களன்று உலக வீடற்றவர்கள் தினத்தில் ஏழை மக்களுக்கு நகராட்சி சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன்.  நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், அப்பு. சந்திரசேகர், வெங்கடேசன், சி.கே ராஜன்,லதா , தஸ்லிமா, திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், வி. என். ஆர், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன், அசோக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தலா 100 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
 

 

சார்ந்த செய்திகள்