பழனியில் தனியாக சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியையிடம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
![Chain flush to the teacher](http://image.nakkheeran.in/cdn/farfuture/PGIzYbClixr1nbSaFZG47imtyDA38nYOHM34wATrUQ0/1544187258/sites/default/files/inline-images/aa1_0.jpg)
பழனி திருநகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சாந்தி. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சாலையில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேரில் ஒருவன் அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்தான். அதிர்ந்த ஆசிரியை சாந்தி பைக்கில் வந்த ஒருவனை பிடித்து இழுத்ததில் ஒருவன் மட்டும் சிக்கிக்கொண்டான், இருவர் செயினுடன் தப்பித்து சென்றனர்.
![Chain flush to the teacher](http://image.nakkheeran.in/cdn/farfuture/jOB8l2RAFhqZ2OEJT-bntTfZmZ-wESa_oakctbn2gH8/1544187300/sites/default/files/inline-images/aa2_0.jpg)
அதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞனை பிடித்து சரமாரியாக அடித்தனர். சம்பவமறிந்து வந்த போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த இளைஞனை பிடித்து சென்றனர். மேலும் அவனுடன் இருந்த அந்த இரண்டு நபர்கள் யார் எங்கே உள்ளனர் என விசாரித்து வருகின்றனர்.
சிக்கியவன் மதீனா நகரை சேர்ந்த சாதிக்கபாஷா என்பது தெரிவந்துள்ளது. மற்ற இருவரை போலீசார் தேடிவருகின்றனர். தனியாக சென்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பு செய்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.