Skip to main content

கஞ்சா கடத்திய ஆட்டோ பறிமுதல்

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
Auto seized

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் எடைக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்து கொண்டு இருந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். பிறகு ஆட்டோவை போலீஸார் சோதனை செய்தபோது அதில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்