Skip to main content

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை; பிளஸ்2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு! 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

 

Admission of students to cooperative charter training; Opportunity for those who completed Plus2!


சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், ஓராண்டு கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.

 

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2022-2023ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியானது நடப்பு ஆண்டு முதல் ஓராண்டு கால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் நடக்கிறது. 

 

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, ஆகஸ்ட் 1- ஆம் தேதி 17 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதி மாலை 05.30 மணி வரை, அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 

 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உரிய ஆவண நகல்களுடன் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் ஆகஸ்ட் 22- ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் பயிற்சி நிலைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

 

கூட்டுறவு பட்டய பயிற்சியுடன், கணினி பயிற்சி, நகை மதிப்பீடு பயிற்சிகளும் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெறவும், சமர்ப்பிக்கவும், 'முதல்வர், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூர் மெயின் ரோடு, காமராஜர் நகர் காலனி, சேலம் - 636014' என்ற முகவரியில் அணுகலாம். மேலும் விவரங்களை, 0427 - 2240944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

 

இப்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.