Skip to main content

சென்னையில் நடிகர் விக்ரம் மகனின் கார் விபத்து!

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
vikram-son-dhruv-main


சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே நடிகர் விக்ரம் மகன் கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Hospital explanation about actor Vikram's health!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் விக்ரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

விக்ரம் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிய நிலையில் அவரின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சியான் விக்ரமிற்கு லேசான மார்பு அசௌகரியம் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.


 

Next Story

திரை தீ பிடிக்கும்னு பாடுனாங்களே அது இது தானோ? விக்ரம் ஓடிய தியேட்டரில் நடந்த சம்பவம்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Fans leaving the theater fast!

 

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக் கொண்டிருந்த போது, திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றி எரிந்தது. 

 

புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் திரையிடப்பட்டது. இரவு காட்சியில் ஏராளமானோர் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் வேகமாக திரையரங்கை விட்டு அலறியடித்தபடி வெளியேறினர். 

 

தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், அங்கு வருவதற்குள் திரை முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.