Skip to main content

திருஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:’’தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் திருஆரூரான், அம்பிகா ஆகிய பெயர்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து விவசாயிகளின் பெயர்களில் ரூ.450 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறது. உழவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையிலான இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 

ட்

 

திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, கோட்டூர், கடலூர் மாவட்டம் இறையூர், ஏ.சித்தூர் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125 கோடிக்கும் கூடுதலாக நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இரு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலுவைத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகம், நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து சில படிவங்களில் கையெழுத்து வாங்கி, அவற்றை வைத்து விவசாயிகள் பெயரில் வங்கிகளில் இருந்து பல நூறு  கோடி கடன் வாங்கியுள்ளது.

 

கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.90 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.360 கோடியும் கடன் வாங்கப்பட்டு மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எந்தெந்த விவசாயிகளின் பெயர்களில் எல்லாம் கடன் வாங்கப்பட்டதோ, அவர்களுக்கு வங்கிகள் ஜப்தி அறிவிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே இந்த மோசடி வெளிவந்துள்ளது.

 

ஆலை நிர்வாகத்தின் இந்த செயல் மிகப்பெரிய மோசடிக் குற்றம் என்பது மட்டுமி

ன்றி, மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகமும் ஆகும். உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு உரிய   விலையை வழங்காததுடன், அவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதன் மூலம் விவசாயிகளை மீள முடியாத நெருக்கடியில் தள்ளியிருக்கிறது ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம். இதற்காக ஆலை அதிபர் ராம் தியாகராஜனை காவல்துறை கைது செய்திருப்பது பாராட்டத்தக்கது.

 

பொதுத்துறை வங்கி உயரதிகாரிகளின் துணை இல்லாமல் இத்தகைய மோசடியை திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியிருக்க முடியாது. விவசாயிகள் வேளாண் பயன்பாட்டுக்காக சில ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் கூட, அதற்கு ஏராளமான ஆவணங்களைக் கேட்கும் பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள், எந்த ஆவணமுமே இல்லாமல் வெற்றுப் படிவத்தில் போடப்பட்டிருந்த விவசாயிகளின் கையெழுத்துகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ரூ.450 கோடி கடனை வாரி வழங்கின? என்பது தெரியவில்லை. விவசாயிகளுக்குத் தான் கடன் வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் கடன் தொகையை, விவசாயிகளிடம் வழங்காமல் சர்க்கரை ஆலைகளிடம் வழங்கியது ஏன்? என்ற வினாவும் எழுகிறது. இந்த வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்ற வேண்டும்.

 

ஒரு காலத்தில் நேர்மையான நிறுவனமாக செயல்பட்டு வந்த திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் இப்போது மோசடிகளின் மொத்த உருவமாக மாறியிருக்கிறது. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட  கரும்புக்கு உரிய தொகையை வழங்காமல் பாக்கி வைப்பது மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய வெட்டுக் கூலியை முடக்கி வைப்பது, ஆலை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  ஊதியத்தை வழங்க மறுப்பது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் செய்துள்ளது.

 

இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆலை நிர்வாகம் மீது பல நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காததற்காக இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை, திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகியவற்றின் சர்க்கரைக் கிடங்குகளை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ரசு மூடி முத்திரையிட்டது. ஆனால், அதன் பிறகும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திருந்தவில்லை என்பதையே ரூ.450 கோடி மோசடி காட்டுகிறது.

 

உழவர்களுக்கு துரோகம் இழைத்து அவர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் இனியும் பழைய நிர்வாகத்தில் இயங்குவது சரியல்ல. அது மேலும் மேலும் ஊழல்களும், மோசடிகளும் நடப்பதற்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே,  திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் ஆலை உரிமையாளரின் பெயருக்கு மாற்றி, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடன் வசூல் என்ற பெயரில் உழவர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இந்த மோசடியில் பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் அதிகாரிகள்?

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்கு ஜீலை 2ந்தேதி ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே, விளம்பர பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது.   இதுப்பற்றி அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள்  முறையிட்டனர். இதில் அனுமதி பெறாத பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டது.  தனியார் நிறுவன ஜூவல்லரி ஒன்றின் பேனரும் அகற்றப்பட்டுள்ளது.  
 

s

அந்த பேனர் ஜீலை 3ந்தேதியான இன்று மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்த்து செங்கம் நகர கடைக்காரர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்தவர்களிடம், அவர்கள் பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளார்கள். அதனால் மீண்டும் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்கள்.

 

பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளார்கள் என்றால், அது எத்தனை நாளைக்கு, நீதிமன்ற உத்தரவு எத்தனை நாள் வரை வைக்கலாம் என்கிற வழிக்காட்டல் உள்ள நிலையில் அதனை கடைப்பிடித்து தான் இந்த பேனர் வைக்க அனுமதி தந்துள்ளார்களா ?, அனுமதியோடு தான் பேனர் வைத்துள்ளார்கள் என்றால் பின்னர் ஏன் அதனை நேற்று கழட்ட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.  அவர்களோ, பணம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள், பேனர் வைப்பதை கண்டுக்கொள்ளாமல் விடுவதால் தான் இந்த சிக்கல். இந்த பேனர் அனுமதி பெற்று தான் வைக்கப்பட்டுள்ளது என்றால், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுப்படி எத்தனை நாள் வைக்க அனுமதிக்கப்படுகிறது, அதற்கான அனுமதி தேதி, எண் போன்றவை விளம்பர பேனரில் குறிப்பிட வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது அது ஏன் இந்த பேனரில் இல்லையே என கேள்வி எழுப்புகின்றனர்.

 
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் அதிகாரிகள்?

Next Story

கலைஞரை அப்பா என்று உருகிய பெண் காவலர் ;நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்!!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

மறைந்த திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் இரங்கற்பா வாசித்ததால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, விஆர்எஸ் கொடுத்த நுண்ணறிவு பிரிவு பெண் காவலர் செல்வராணி குறித்து நாம் ஏற்கனவே நக்கீரன் இணைதளத்தில் எழுதியிருந்தோம். இந்த நிலையில் திருச்சிக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலின் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து நான் அண்ணாக இருப்பேன் என்று உருகியது உணர்ச்சிமிகுந்த இடமாக மாறியது.

 

 

spread poem about kalaingar; stlain meets that women police

 

திருச்சி மாநகர போலீசில் நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் செல்வராணி இவர் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான  கலைஞர் இறந்தபோது, இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் இரங்கற்பா வாசித்தார். இது வைரலாக பரவியது. இதேபோல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இரங்கற்பா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கலைஞருக்கு இரங்கற்பா வாசித்ததற்கு விளக்கம் கேட்டு உயரதிகாரிகள் மெமோ அளித்தனர். செல்வராணி விளக்கம் அளிப்பதற்குள் அவர் மாநகர போலீசிலிருந்து மத்திய மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

 

 

இதையடுத்து பழிவாங்கும் நடவடிக்கையால் வெறுப்படைந்த அவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கிடையே மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர்  மாலை திருச்சி திரும்பிய ஸ்டாலின் செல்வராணி விஆர்எஸ் கொடுத்த தகவல் அறிந்து இரவு 10.30 மணிக்கு கே.கே.நகர், ரெங்கநகர் 3வது மெயின்ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

 

spread poem about kalaingar; stlain meets that women police

 

 

 

அப்போது செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், ‘இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளனாரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? இனி என்ன செய்யப்போகிறீர்கள்’ எனக்கேட்க, ‘இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைபணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன்’ என செல்வராணி என்றார்.

 

 

 

‘நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கலைஞரை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம்’ என உருக்கமாக தெரிவித்தார்.

 

 

 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை இரங்கல் கவிதை வாசித்து காண்பிக்க அதை கேட்டவுடன் மு.க.ஸ்டாலினும் மனம் கலங்கினார். 

 

 

 

அப்போது திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, செல்வராணியின் கணவர் ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.