Skip to main content

தனியார் ரிசார்ட்டில் 8 வயது சிறுமி உயிரிழப்பு-கோவளத்தில் பரபரப்பு

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

8 age girl incident in private resort;commotion in Kovalam

 

சென்னை அடுத்த மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை அடுத்த மகாபலிபுரம் கோவளம் சாலை பகுதியில் உள்ள தனியா ரிசார்ட் ஒன்றிற்கு செங்கல்பட்டுபாரதிதாசன் காலனி பகுதியைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் காணும் பொங்கல் பண்டிகை காரணமாக சென்றுள்ளனர். இன்று மாலை 6 மணி அளவில் மூன்று குடும்பத்தினரும் அங்கு பொழுதை கழித்த நிலையில், அங்கு வந்திருந்த சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார். அப்பொழுது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்