Skip to main content

வேன்- லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பெண்கள் பலி!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

4 women passed away in van-truck head-on collision

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பக்கமுள்ள புதியம்புத்தூர் முப்புலிவெட்டி, நடுவக்குறிச்சி, சில்லாநத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அருகிலுள்ள தூத்துக்குடி சிப்காட்டிலிருக்கும் தனியார் உலர் பூ தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகின்றனர். இதற்காக அவர்களை அந்த நிறுவனம் சார்பில் தினமும் காலையில் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு வேலை முடிந்து மாலை அதே வேன்களில் வீடு திரும்புவது அன்றாட நடைமுறை. நேற்று (10.09.2021) காலை 6.30 மணியளவில் முப்புலிவெட்டி, புதியம்புத்தூர், சில்லாநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி நிறுவனத்திற்கு அந்த வேன் சென்றது. வேனை புதியம்புத்தூரைச் சேர்ந்த பாபு என்பவர் ஓட்டியிருக்கிறார்.

 

புதியம்புத்தூர் - தூத்துக்குடி ரோட்டில் சில்லாநத்தம் கிராமம் அருகே மெயின் ரோட்டில் வேன் செல்லும்போது, எதிரே தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் அப்பளமாக நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் சில்லாநத்தம் செல்வராணி, முப்புலிவெட்டி கிராமத்தின் சந்தியா, சில்லாநத்தம் மேலத்தெருவைச் சேர்ந்த காமாட்சி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து அருகிலுள்ள கிராம மக்கள் விரைந்து வந்து காயம்பட்டோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி புதியம்புத்தூரைச் சேர்ந்த மணிமேகலை (20) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. 

 

4 women passed away in van-truck head-on collision

 

இந்த விபத்தில் லாரி டிரைவர் பண்டாரம், வேன் டிரைவர் பாபு, பேச்சியம்மாள், சில்லாநத்தம் ராமலட்சுமி, நடுவக்குறிச்சி வனிதா (19), பொன்இசக்கி (44), செல்வமுருகன், லிங்கம்மாள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. பொன்னரசு, புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய புதியம்புத்தூர் நயினார்குளத்தைச் சேர்ந்த பண்டாரம் மீது புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். கோர விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பிடாரத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்