Skip to main content

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றமா..?

Published on 02/05/2021 | Edited on 02/05/2021
Will IPS officers change?

 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்படவிருக்கிறார்கள். தமிழக டிஜிபியாக இருக்கும் திரிபாதி நடப்பு மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய டி.ஜி.பி.யார் ? என்கிற விவாதம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடத்தில் எதிரொலிக்கிறது. இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “டி.ஜி.பி. அந்தஸ்தில் 1987 ஆம் வருட பேட்ஜில் சைலேந்திரபாபு, கரன்சின்கா, பிரதீப்  பிலிப் , 1988 ஆம் வருட பேட்ஜில் சஞ்சய் அரோரா, சுனில்குமார்சிங், 1989 ஆம் வருட பேட்ஜில் கந்தசாமி, ஷகில் அக்தர், ராஜேஷ்தாஸ், பி.கே.ரவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ராஜேஷ்தாஸ் சிக்கி அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

 

இந்த 9 அதிகாரிகளின் பட்டியல் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களில் சீனியாரிட்டிபடி மூன்று பேரை தேர்வு செய்து தமிழக அரசிடம் தேர்வாணையம் ஒப்படைக்கும். அவர்களில் ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்வார்” என்கின்றனர். மேலும்,  தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் டிஜிபியாக அதாவது தமிழக காவல்துறையின் தலைவராக நியமிக்கப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்க வேண்டும், வட இந்திய அதிகாரிகளுக்கு வாய்ப்பு தந்து விடாதீர்கள் என இப்போதே ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர், பல ரூட்டுகளில் ஸ்டாலினுக்கு தகவல அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம், திமுக ஆட்சியில் எப்போதும் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதால், தமிழக அதிகாரியாக இருந்தாலும் சரி, வட இந்திய அதிகாரியாக இருந்தாலும் சரி இதுவரை பாலியல் குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மையான அதிகாரியை நியமியுங்கள் என வேண்டுக்கொள் வைத்து வருகின்றனர்.

 

மேலும் அதுதான் உங்கள் ஆட்சிக்கு நல்லப்பெயரை பெற்றுத் தரும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பி வைத்தபடி இருக்கின்றனர். அதேபோல, அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு பொட்டித் தூக்கி சேவகம் செய்து வந்த அதிகாரிகளும் மீண்டும் நல்ல பதவியை கைப்பற்ற திமுகவின் சித்தரஞ்சன் சாலையை நெருங்கி வருகிறார்கள். அதற்காக தூதுவிட்டு கொண்டும் இருக்கின்றனர். அதனால், ‘உயரதிகாரிகள் நியமணத்தில் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும்’ என்று விவரிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.