Skip to main content

இராணிப்பேட்டை நகர் மன்ற ராணி யார்?

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

Who is the queen of Ranipettai town council?

 

இராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைநகரம் ராணிப்பேட்டை. இந்த நகரத்தின் மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 30 வார்டுகள் உள்ளன. திமுகவிடம் 23 கவுன்சிலர்களும், அதிமுகவிடம் 4 கவுன்சிலர்களும், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் தலா ஒரு கவுன்சிலர் என்கிற கணக்கில் உள்ளனர்.

 

ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் தான் ராணிப்பேட்டையின் ராணியாகப்போகிறார் என்பது உறுதியானது.

 

ராணிப்பேட்டை நகராட்சியின் ராணியாகிவிட வேண்டுமென நான்கு பேர் போட்டியில் இருந்தனர். அதில் இருவர் தீவிரமாக காய் நகர்த்தினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மனைவி சுஜாதா, நகரத் துணைச் செயலாளர் ஏர்டெல்குமார் கவுன்சிலராகியுள்ள தனது அம்மா, கவுன்சிலர்கள் சங்கீதா அசேன், ராஜேஸ்வரி போன்றோர் முயற்சி செய்தனர்.

 

ராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதி, அவர் வசிக்கும் நகரம் என்பதால் நகர்மன்றத் தலைவியாக யாரைத் தேர்வு செய்வது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தினார். இறுதியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மனைவி சுஜாதாவை தேர்வு செய்தார். வினோத் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர், சுஜாதா முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்னியர்கள், முதலியார்கள், பட்டியலின மக்கள் வலிமையாகவுள்ளார்கள். வினோத் மனைவியை சேர்மனாக்குவதன் மூலம் இரு சமுதாயங்களை பிரதிநிதித்துவம் செய்தது போலாகிவிடும் என சுஜாதா வினோத்தை தேர்வு செய்தார் அமைச்சர் காந்தி.

 

Who is the queen of Ranipettai town council?

 

அடுத்ததாக நகர் மன்ற துணை தலைவர் பதவி பட்டியலின மக்களுக்கு தரலாம் என முடிவு செய்தார் காந்தி. கழகத்திலுள்ள பட்டியலினத்தை சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவருக்கு தரலாமா என ஆலோசித்தனர்.

 

திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு வைஸ்சேர்மன் பதவி தரவேண்டும் எனக்கேட்டதால் அக்கட்சிக்கு வழங்கலாமா என ஆலோசனை நடத்தினர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் பாராளுமன்ற துணை செயலாளரான ரமேஷ்கர்ணா என்கிற கர்ணாகரனுக்கு வழங்க முடிவு செய்து கட்சியினரிடம் அறிவித்துள்ளனர்.

 

இராணிப்பேட்டை நகர்மன்றத்தின் ராணியாகப் போகிறவர் சுஜாதா என்பதும், துணைத்தலைவர் ரமேஷ்கர்ணா என்பதும் உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அனைத்து தரப்பினரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.