Skip to main content

''இனியும் கே.பி.முனுசாமியை விட்டு வைக்கக் கூடாது'' - ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட பகீர் ஆடியோ

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

 "He should not be left behind anymore" - OPS supporter KP Munuswamy released sensational audio

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் தற்பொழுது இபிஎஸ் தரப்பில் உள்ள கே.பி.முனுசாமி கொளத்தூர் தொகுதியில் பொறுப்பு வழங்க ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, ''ஓபிஎஸ் இடம் இருந்து எல்லா தகவல்களையும் கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லி எட்டப்பன் வேலை பார்த்தவர் தான் கே.பி.முனுசாமி. என்னை போல் நிறைய பேர் பணம் கொடுத்து ஏமாந்து இருக்காங்க. அவர்களெல்லாம் தானாக முன்வர வேண்டும். எதற்காக இந்த ஆடியோவை விட்டோம் என்றால் வருங்காலங்களில் கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேரும் அப்பொழுது அவர் நமக்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால் அமைதியாக இருந்தோம். ஆனால் அவர் பேசுகின்ற பேச்சை எல்லாம் பார்த்தால் இனிமேல் அமைதியா இருக்கக்கூடாது.

 

இனிமேல் அவரை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்துதான் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளோம். இன்னும்  இரண்டு நாளில் பதில் வரவில்லை என்றால் அடுத்து வீடியோ ரிலீஸ் பண்ணுவேன். வீடியோ ரிலீஸ் பண்ணா அது மிகப்பெரிய பின்னடைவு. அதன் பிறகு அவரை  எடப்பாடி தரப்பில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். முனுசாமியை பற்றி யாருக்கும் தெரியவில்லை இன்னும். கட்சிய தாங்கி பிடிக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா அதனாலதான் இதனை வெளிப்படுத்தியுள்ளோம். ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. அந்த ஆடியோ குறித்து எனக்கு பதில் தரவில்லை என்றால் தங்கமணி, வேலுமணி கொடுத்த வீடியோ வெளியாகும்'' என்றார்.

 

வெளியாகி உள்ள அந்த ஆடியோவில்,

 

கிருஷ்ணமூர்த்தி: அண்ணா இப்போ ஒரு 50 ரூபாய் கொடுத்து பேசிப்போம் அண்ணே

 

கே.பி.முனுசாமி: சரி சரி

 

கிருஷ்ணமூர்த்தி: நாம பேசுற விஷயம் தெரிய வேண்டாம் அண்ணே

 

கே.பி.முனுசாமி: இல்ல இல்ல

 

கிருஷ்ணமூர்த்தி: ஏன்னா நான் பழனி அண்ணனை நம்பறதா இல்ல. அவரு ஒரு மாதிரி டைப்பு

 

கே.பி.முனுசாமி: இந்த விஷயத்தில அவரே நம்பலையே

 

கிருஷ்ணமூர்த்தி: அண்ணா 11 மணிக்குள்ள 50 ரெடி பண்ணிடுறேன். ஈவினிங் குள்ள 1 ஒன்னு ரெடி பண்ணிடுறேன். எப்படி அண்ணே கொண்டு வரட்டும்

 

கே.பி.முனுசாமி: சன்ன அனுப்பறேன் கொடுத்துருங்க...

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.