Skip to main content

பிரதமர் மோடிக்காக சேலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு 

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Grand arrangement for Prime Minister Modi in Salem
கோப்புப் படம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி சேலம் வருகிறார். சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளை மையப்படுத்தி பரப்புரை செய்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. 

இந்நிலையில், முன்னெப்போதையும் விட இந்த தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் அடிக்கடி தமிழகத்தை வட்டமடித்து வருகின்றனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தை குறி வைத்து பரப்புரை உத்திகளை வகுத்துள்ளனர். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டரை மாதங்களில் தமிழகத்திற்கு நான்கு முறை சுற்றுப்பயணம் வந்துள்ளார். 

இந்நிலையில், வரும் 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சேலத்திற்கு வருகை தர உள்ளார். சேலம், நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளை மையப்படுத்தி பா.ஜ.க., கூட்டணி கட்சிகளை ஆதரித்து பேசுகிறார். இதற்காக, சேலம் - நாமக்கல் சாலையில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது. 

பொதுக்கூட்டம் மதியம் 2 மணியளவில் நடக்கிறது. கூட்டம் நடைபெறும் இடத்தை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. அருண் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, கேரளா மாநிலத்திற்கு பிரதமர் செல்ல உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.