Skip to main content

திருவண்ணாமலை மாவட்டம்: திமுக வேட்பாளர்களும் விவரங்களும்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies


திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் எதுவும் தராமல் 8 தொகுதியிலும் திமுகவே போட்டியிடுகிறது.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

திருவண்ணாமலை – எ.வ.வேலு: இவர் திமுக தெற்கு மா.செ., முன்னாள் அமைச்சர். இந்த தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்பு தண்டராம்பட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி: முன்னாள் அமைச்சரான இவர், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுவில் உள்ளார். மூன்றாவது முறையாக கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதியில் ஒருமுறை தோல்வியும், ஒரு முறை வெற்றியும் பெற்றுள்ளார். 2011க்கு முன்பு வரை திருவண்ணாமலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றுவந்தார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

செங்கம் (தனி) – மு.பெ.கிரி: மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக இருந்தவர். தனித் தொகுதியான செங்கத்தில் 2016ல் நின்று வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன்: துரிஞ்சாபுரம் ஒ.செவான இவர், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரின் தந்தை திருவேங்கடம், இதே தொகுதியில் சிலமுறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பி திக்குமுக்காட வைத்தவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

போளுர் – கே.வி.சேகரன்: 2016ல் இதே தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர். இரண்டாவது முறையாக அதேதொகுதியில் நிற்க, மீண்டும் அவருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல சர்ச்சைகளில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்துக் களமிறக்கப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

ஆரணி – அன்பழகன்: ஆரணி கிழக்கு ஒ.செவாக உள்ளார். அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை எதிர்த்து அன்பழகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

வந்தவாசி (தனி) – அம்பேத்குமார்: கட்சியின் மாணவரணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். 2016ல் இதே வந்தவாசி தொகுதியில் நின்று வெற்றிபெற்றுள்ளார். இரண்டாவது முறையாக, அதே தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளார்.

 

செய்யார் – ஜோதி: செய்யார் ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.


இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், அதிமுகவுடன் திமுக 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. 2 தொகுதியில் திமுக – பாமக எனவும் ஒரு தொகுதியில் திமுக – பாஜக எனவும் தேர்தல் களம் இருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்