Skip to main content

டிக் டாக் பிரபலமும் பிஜேபி வேட்பாளருமான சோனாலி போகத் மறைவு

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

sonali bogath

 

டிக் டாக் பிரபலமும் ஹரியானா மாநில ஆடம்பூர் பகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சோனாலி போகத் மாரடைப்பால் காலமானார்.

 

41 வயதான சோனாலி போகத் 2006ல் ஒரு தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். டிக் டாக் செயலி வந்தபிறகு அதில் தான் நடித்த பதிவுகளை பதிவிட்டதன் மூலம் தேசிய அளவில் புகழ் பெற்றார். அதன் பின் 2019ல் ஒரு வெப் சீரிஸிலும் நடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். 2019ல் ஹரியானா மாநில ஹிசார் மாவட்டத்தில் ஆடம்பூர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். இந்நிலையில், சில தினங்கள் முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் கோவா சென்றவர், திங்கள் அன்று  இரவு தனக்கு அசௌகரிய நிலை ஏற்படவே தனது பணியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் சோனாலி போகத்தை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ மனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோனாலி போகத் இறப்பிற்கு இரண்டு மணிநேரம் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டா ரீல் ஒன்றை பதிவிட்டிருந்தார். தற்போது அவர் கடைசியாக பதிவிட்ட ரீல் வைரல் ஆகி வருகிறது. 

 

இவரது கணவர் சஞ்சய் போகத் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், கணவர் இறந்ததால் தான்  அதிக மன உளைச்சலில் இருப்பதாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அப்போது பேட்டி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மகள் யசோதரா போகத் உடன் தனியே வசித்து  வந்த போகத்தின் இறப்பு செய்தி ஹரியானா மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் மோதல்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Clash between BJP members over distribution of election money

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.