Skip to main content

57 இடங்களுக்கு ஜூன் 10- ல் மாநிலங்களவைத் தேர்தல்! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

State elections on June 10 for 57 seats!

 

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு வரும் ஜூன் 10- ஆம் தேதி அன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆர்.எஸ். பாரதி. டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29- ல் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், கட்சி வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தி.மு.க.வுக்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உறுதியாகியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் குடியரசுத்தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. 

 

இதனிடையே, அ.தி.மு.க.வுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் உறுதியாகியுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
1085 nominations accepted in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.