Skip to main content

பிரதமரின் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு 6.75 லட்சம் செலவு!

Published on 13/02/2020 | Edited on 14/02/2020

பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு 6.75 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இந்த தகவலை கூறியுள்ளார். தற்போது பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதற்கு முன்னர் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு இந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. 



இந்நிலையில் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு 592.55 கோடியை மத்திய நிதி அமைச்சகம் தற்போது ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டதட்ட 50 கோடி ரூபாய் தற்போது அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி  ஒரு நாளைக்கு 1.62 கோடியும், ஒரு மணி நேரத்திற்கு 6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 11,263 ரூபாயும் செலவிடப்படுகின்றது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியங்கா காந்தி இல்லத்திற்குள் புகுந்த 5 நபர்கள்... விசாரணையில் சி.ஆர்.பி.எஃப்...

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்ற சில நாட்களிலேயே, பிரியங்கா காந்தியின் வீட்டில் சில நபர்கள் உரிய அனுமதியின்றி புகுந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

security breach in priyanka gandhi home

 

 

டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தியின் இல்லத்தில் திடீரென அனுமதியில்லாமல் ஒரு கார் உள்ளே வந்துள்ளது. அதில் வந்திறங்கிய 5 பேர் பிரியங்கா காந்தியை சந்திக்க முற்பட்டதோடு, அவருடன் செல்ஃபீ எடுக்கவும் முயன்றுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகத்தில் (சிஆர்பிஎஃப்) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெலியகியுல்லது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

விடுதலைப்புலிகள் இல்லாததால் சோனியாவுக்கு எஸ்.பி.ஜி தேவையில்லை!- மாநிலங்களவையில் சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

மத்திய அரசு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது. 

CONGRESS PARTY LEADER SONIA GANDHI SPG SECURITY ISSUES PARLIAMENT


மேலும் அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் இதை ஏற்காத சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஆனந்த் சர்மா ஆகியோர் எஸ்.பி.ஜி பாதுகாப்பை கோரி மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. 


இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, விடுதலைப்புலிகள் (LTTE)அமைப்பு தற்போது இல்லாததால் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு தேவையில்லை என்று பேசினார். 

CONGRESS PARTY LEADER SONIA GANDHI SPG SECURITY ISSUES PARLIAMENT


இதனிடையே மாநிலங்களவையில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜே.பி நட்டா, யாருக்கு எந்த அளவு அச்சுறுத்தல் உள்ளது என்பதன் அடிப்படையில் பாதுகாப்பு முடிவு செய்யப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் எந்த விதமான அரசியலும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.