Skip to main content

மகா விஷ்ணுவின் மறு உருவம் நான் - போலி சாமியாரை எச்சரித்த காவல்துறை

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

I am the reincarnation of Maha Vishnu - the police department that alerted the fake preacher

 

என்னை சந்தித்து வழிபட்டால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என திருவண்ணாமலையில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த சாமியாரை காவல்துறையினர் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

 

தெலுங்கானா மாநிலம் கெட்டிதொட்டி பகுதியில் சாமியாரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கெட்டிதொட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் அங்கு இருக்கக்கூடிய சாமியாரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வந்துள்ளனர். அந்த விசாரணையில், சாமியார் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவருக்கு இரண்டு மனைவிகளும் ஒரு மகனும் இருந்துள்ளார்கள்.

 

இதனிடையே, சந்தோஷ் குமார் தனது குடும்பத்தோடு ஒரு வருடத்திற்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் குடிபெயர்ந்துள்ளார். அந்த மாநிலத்தில், வனப்பர்த்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராகவும் பணிபுரிந்துள்ளார். அங்கு தன்னை சந்திக்க வருபவர்களிடம் தான் மகா விஷ்ணுவின் அவதாரம் எனவும் தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறி வந்துள்ளார்.

 

தான் ஒரு  மனித உருவில் வந்த கடவுள் எனக் கூறி நிஜ பாம்பு தன்னுடைய படுக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி வந்துள்ளார். அதனால், தற்காலிகமாக ஐந்து தலை கொண்ட பாம்பு போன்ற கட்டிலை அமைத்து அதில் திருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்து படுத்துக்கொண்டு, தனது இரண்டு மனைவிகளும் தன்னுடைய கால்களை அழுத்தி விடும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

 

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குடும்பத்தோடு தன்னை வழிபட்டால்  உடல் நலம் ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என சந்தோஷ் குமார் மக்களிடம் கூறியிருக்கிறார்.  இந்த செய்தி அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவி சந்தோஷ் குமாரை தரிசிக்க பலரும் வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமார் தன்னை தரிசிக்க வந்த மக்களிடம் அவர்களின் நோய்களைப் பற்றி விசாரித்து தரிசனம் தந்துள்ளார். 

 

இதனையடுத்து ஏராளமான மக்கள் சந்தோஷ் குமாரை தரிசிக்க அந்த பகுதியில் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சந்தோஷ் குமார் மீது எந்த புகாரும் இல்லாததால் அவரை எச்சரித்து விடுவித்தனர் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.