Skip to main content

அசோக் லேலண்ட் சி.இ.ஒ வினோத் கே. தாசரி ராஜினாமா

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வினோத் கே. தாசரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் நடப்பு நிதி ஆண்டான 2019 மார்ச் 31 வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

vvv

 

 

சென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் இவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தாசரி தெரிவித்துள்ளார். இவருக்கு பதிலாக நிறுவனத்தின் செயல் தலைவராக தீரஜ் ஹிந்துஜா பொறுப்பேற்றுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்