Skip to main content

டிராக்டர் ஓட்டிய செங்கோட்டையன்... -''ஆக, அடுத்து இதுதான்...'' -ர.ர.க்கள் கமென்ட்

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
K. A. Sengottaiyan

 

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசு நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்ட பிறகு என்ன செய்வது என செயல்படுத்தபடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். 

 

ஜூலை 5ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர்மேட்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விழா நடைபெற்றது. அதில் குள்ளம்பாளையம் ஒடையாக்கவுண்டன்பாளையம் என நான்கு ஊராட்சிகளில் உள்ள மகளிர் கூட்டமைப்பினர்களுக்கு டிராக்டர் உட்பட வேளாண் கருவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதனை தொடர்ந்து, அயலூர் செம்மாண்டம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையத்தில் குடிநீர் திட்டத்தையும் கூட்டுதல் படுக்கை வசதி அறைகளையும் திறந்துவைத்தார். 

 

K. A. Sengottaiyan

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 தொலைக்காட்சிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். மேலும் இரண்டு தொலைக்காட்சிகளில் பாட வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அரசு வேண்டுகோளை ஏற்று விளம்பரம் இல்லாமல், தொலைக்காட்சி நிறுவனங்கள் தன்னலம் கருதாது நேரம் ஒதுக்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கியூஆர் கோடு மூலம் கல்வியில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல் புதிய கல்விக்கொள்கையில் அரசின் சார்பில் என்ன நடைமுறைப்படுத்தலாம் என்கிற யோசனையில் நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்ட பிறகு என்ன செய்வது என அவை செயல்படுத்தபடும். கஸ்தூரி ரங்கன் கமிட்டி மாநிலங்களில் கருத்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் ஆலோசனையுடன் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

மகளிர் குழுக்களுக்கு டிராக்டர் வழங்கியபோது ஒரு டிராக்டரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்த செங்கோட்டையன் சிறிது தூரம் ஒட்டினார். டிராக்டர் பின்னால் ஓடி வந்த கட்சி நிர்வாகிகள், ''அண்ணே இதே போல் வயக்காட்டில் ஒட்டுவீங்களா?'' என கிண்டலாக கேட்க, ''அட என்னப்பா அடுத்த எலெக்ஷனுக்குப் பிறகு வயக்காட்டுல தான் அண்ணனுக்கு வேலையே...'' என மற்றுமொரு நிர்வாகி பதில் கொடுத்து கலகலப்பூட்டினார். ஆக, செங்கோட்டையனின் அரசியல் வாழ்வு இந்த அரசின் காலகட்டம் வரைக்கும்தான் என உள்ளுர் நிர்வாகிகளே நம்பிக்கையோடு உள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.