Skip to main content

நீட் தேர்வுக்கு பதிவு செய்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியது! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

The number of registrants for the NEET exam has crossed 18 lakh for the first time!

 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், தமிழில் எழுத விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.

 

2022- ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத முதன்முறையாக 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய ஆண்டில் விண்ணப்பித்ததை விட, 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு 12 இந்திய மொழிகளில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் தமிழில் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது. 

 

அதேபோல், நீட் பொதுத்தேர்வை எழுதும் பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 

 

கடந்த 2017- ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில், இந்தாண்டு 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்